ஆண்டவர் அவையினில் பாடுங்களே ***

ஆண்டவர் அவையினில் பாடுங்களே
நல்ல ஆனந்த கீதங்களே

1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே - நம்
அவயங்கள் அருளிசை பாடிடுமே
நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ
அனைவரின் அன்பனை வாழ்த்திடவே

2. மனமென்னும் கோவிலில் தோரணங்கள் - நம்
மகிழ்ச்சியை பரப்பிடும் மணியொலிகள்
இதயத்தின் எழுச்சியை தூபப்புகை ஆ
இதயத்தின் அன்பனை வணங்கிடவே