அர்ச். பிலோமினம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். பிலோமினம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். பிலோமினம்மாளின் 13 மணி ஜெபமாலை

பாடுபட்ட சிலுவையில்:  அர்ச். சிலுவை...  விசுவாச மந்திரம் சொல்லவும்.

3 வெள்ளை மணிகளில்:  தமதிரித்துவத்தை நினைத்து 3 பரலோக மந்திரம் சொல்லவும்.

பிதாவுக்கும்...

13 சிவப்பு மணிகளில்: 

முதல்: அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே வாழ்க!  மரியன்னைக்குப் பின் உமது தெய்வீக மணாளனிடம் எனக்காக மனுப் பேசுகிறவளே!  இப்பொழுதும் என் மரண நேரத்திலும் எனக்காக மன்றாடும். 

துணை: சேசு மரியாயின் அன்புள்ள குமாரத்தியே!  உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதக்கத்தில்:   புகழ் மிக்க அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே! சேசுவுக்காக தைரியமாய் உம் இரத்தத்தை சிந்தினீரே.  உமது வாழ்விலும் விசேஷமாய் உம் மரணத்தில் ஆண்டவர் உம்மீது பொழிந்த எல்லா வரங்களுக்காகவும் அவரை வாழ்த்துகிறேன்.  மகிமையாலும் வல்லமையாலும் அவர் உம்மை முடிசூட்டியதற்காக அவரைத் துதித்து மகிமைப்படுத்துகிறேன்.  உமது மன்றாட்டின் வழியாக அவரிடம் நான் கேட்கும் வரப்பிரசாதங்களை...பெற்றுத் தருவீராக! 

ஆமென்.

குறிப்பு:   இச்செபமாலையின் 13 சிவப்பு மணிகள் அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளின் 13 வயதைக் குறிக்கும்.

“வாழும் ஜெபமாலை” பத்துமணி ஜெபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்

புகழ்மிக்க கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். பிலோமினம்மாளே!  கிறீஸ்துவுக்காக நீர் சிந்திய உம்முடைய தூய இரத்தத்திலே துவைந்த ரோஜா மலரே! தேவ இரகசிய ரோஜா மாதாவின் செல்வ மகளே!  வாழும் ஜெபமாலையின் வல்லமையுள்ள பாதுகாவலியே!  இப்பொழுது நான் உமது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப் போகிற பத்து மணி ஜெபத்தையும் திரு ஜெபமாலையின் இராக்கினியிடம் உமது கன்னிக் கரங்களால் சேர்த்தருள்வீராக! 

ஆமென்.

(பத்து மணி முடிவில்)

துயரம் நிறைந்த மரியாயின் மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பிலோமினம்மாள் கயிறு அணியும் ஜெபம்

ஓ மிகப் பரிசுத்தமான கன்னிகையே! மகிமை பொருந்திய வேதசாட்சியே!  அர்ச். பிலோமினம்மாளே!  சர்வேசுரன் தமது நித்திய வல்லமையில் இந்த நிர்ப்பாக்கிய நாட்களில், கிறீஸ்தவர்களுடைய ஆன்மாக்களில் விசுவாசம் புதுப்பிக்கப்படவும் நம்பிக்கை தாங்கப்படவும் தேவ சிநேகம் தூண்டப்படவும் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளாரே. உமது பாதத்தில் விழுந்து கிடக்கிற என்னைப் பாரும். நன்மைத்தனமும் கருணையும் நிறைந்த கன்னிகையே! என் மன்றாட்டுக்களை ஏற்க தயை புரியும்.  உலகத்தின் கவர்ச்சி மிக்க இன்பங்களை நீர் பலியாக்கச் செய்த உம்முடைய பரிசுத்தத்தையும், உமக்கெதிரான மிகக் கொடும் தாக்குதல்களையெல்லாம் எதிர்த்து நிற்கச் செய்த ஆன்ம வலிமையையும், உம்முடைய மகா பயங்கரமான உபாதைகளாலும் சேசு மீதுள்ள அவிக்க முடியாத உமது ஆர்வமிக்க அன்பையும் எனக்கு அடைந்து தாரும்.  இவ்விதமாய் உம்முடைய புனித கயிற்றை அணிந்து, உம்மைக் கண்டுபாவித்து ஒருநாள் உம்மோடே நான் மோட்சத்தில் முடிசூட்டப்படுவேனாக.  

ஆமென்.

அர்ச். பிலோமினம்மாளுக்கு நவநாள் ஜெபம்

ஓ மகாப் பெரிய அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே! கன்னியான வேதசாட்சியே! எங்கள் காலங்களின் புதுமை வரத்தியே! எனக்கு ஆத்தும சரீர தூய்மையையும் இருதயமான பரிசுத்தத்தையும் நினைவிலும், நேசத்திலும் புனிதத்தையும் பெற்றுத் தாரும்.  மிகுதியான வேதனைகளின் நடுவில் நீர் அனுசரித்த பொறுமையினால், கடவுள் எனக்குச் சித்தங்கொள்ளும்.  சகல துன்பங்களையும் பணிவுடன் ஏற்றுக் கொள்ளும் வரத்தை எனக்கு அடைந்து தாரும்.  உம்மை வதைத்தவனின் கட்டளையால் நீர் எறியப்பட்ட தைபர் நதி நீரிலிருந்து நீர் இரட்சிக்கப்பட்டது போல, நாங்கள் ஆத்தும சேதமின்றி தப்ப உதவி புரியும். இந்த உபகாரங்களுடன், ஓ சேசுவின் பிரமாணிக்கமுள்ள பத்தினியே!  நான் ஆர்வத்துடன் இப்போது உம்மிடம் எடுத்துக் கூறும் வேண்டுதலையும் கேட்டருளும்படி மன்றாடுகிறேன்.

தூய்மையுள்ள கன்னிகையே, பரிசுத்த வேதசாட்சியே, மோட்சத்திலிருந்து ஒரு இரக்கப் பார்வையை உம் பிரமாணிக்கமுள்ள ஊழியன் மீது பொழிவீராக. என் துயரத்தில் எனக்கு ஆறுதலாயிருப்பீராக. ஆபத்தில் என்னைக் காப்பாற்றும்.  எதற்கும் மேலாக என் மரண வேளையில் எனக்கு உதவியாக வாரும். கடவுளுடைய திருச்சபையின் காரியங்களைக் கருத்தாய்க் காத்தருள்வீராக! அதன் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மன்றாடும். விசுவாசம் விரிந்து பரவும்படியாகவும் பாப்பரசருக்காகவும் தேவ ஊழியர்களுக்காகவும், நீதிமான்கள் நீடித்து நிலைக்கும்படியாகவும், பாவிகள் மனந்திரும்பவும் உத்தரிக்கிற ஆன்மாக்கள் விசே­மாய் நான் நேசிக்கிறவர்கள் ஆறுதல் பெறவும் வேண்டிக் கொள்ளும்.  ஓ பெரிய அர்ச்சியசிஷ்டவளே! உம்முடைய வெற்றியை பூமியில் நாங்கள் கொண்டாடுகிறோம். உமக்கு மோட்சத்தில் சூட்டப்பட்ட மகிமையின் மகுடத்தை நான் ஒருநாள் தரிசிக்க எனக்குத் தயைபுரிவீராக. சர்வேசுரன் தம்முடைய அன்பிற்காக இக்குறுகிய வாழ்வில் அனுபவிக்கப்படும் வேதனைகளை நித்திய வெகுமானத்தால் தாராளமாய் சன்மானிக்கிறாரே. அவரை முடிவில்லாமல் நான் மோட்சத்தில் வாழ்த்தும்படி எனக்காக வேண்டிக் கொள்ளும். 

ஆமென்.

அர்ச். வியான்னி அருளப்பரால் இயற்றப்பட்ட அர்ச். பிலோமினம்மாள் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னியர்களின் இராக்கினியான அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறப்பிலிருந்தே அபரிமிதமான வரப்பிர சாதங்களால் நிரப்பப்பட்ட அர்ச். பிலோமினம் மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னிமரியாயை உத்தம விதமாய்க் கண்டு பாவித்த அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியரின் முன்மாதிரிகையான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிக உத்தம தாழ்ச்சியின் கூடமான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடவுளின் மகிமைக்காகப் பற்றியயரியும் ஆவல் கொண்டவளான அர்ச். பிலோமி னம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுவின் அன்புக்குப் பலியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திடத்திற்கும் நீடித்து நிலைத்தலுக்கும் முன்மாதிரிகையான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த கற்பின் வெல்ல முடியாத வீர முதல்வியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த வீர வைராக்கியமான புண்ணியங் களின் பிரதிபலிப்பான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வாதனைகளின் எதிரே உறுதியும், துணிச்ச லும் கொண்டவளான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய மணாளரைப்போல் கசைகளால் அடிக்கப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அம்பு மழையால் குத்தித் துளைக்கப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விலங்கிடப்பட்டிருக்கையில் கடவுளின் தாயால் ஆறுதலளிக்கப்பட்ட அர்ச். பிலோமி னம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறைச்சாலையிலே அற்புதமாகக் குண மாக்கப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய வாதைகளிலே சம்மனசுக்களால் தேற்றப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அரச சிம்மாசனத்தின் மாட்சிமையைவிட கொடிய வேதனைகளையும், மரணத்தையும் தெரிந்துகொண்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய வேதசாட்சியத்தைக் கண்டவர் களை மனந்திருப்பிய அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய கொலைஞர்களின் கோபா வேசத்தை சலிப்புறச் செய்த அர்ச். பிலோமி னம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசற்றவர்களின் பாதுகாப்பாளியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இளைஞர்களின் பாதுகாவலியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நிர்ப்பாக்கியர்களின் அடைக்கலமான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நோயாளிகளுக்கும் பலவீனர்களுக்கும் ஆரோக்கியமான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

போராடும் திருச்சபையின் புதிய ஒளியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் அவபக்தியை வெட்கமுறச் செய்கிறவளான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசிகளின் விசுவாசத்தையும், தைரியத் தையும் தூண்டியயழுப்புகிறவளான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய நாமம் மோட்சத்தில் மகிமைப் படவும், நரகத்தில் அஞ்சப்படவும் வரம்பெற்ற அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகவும் சிறந்த புதுமைகளால் பெரும் பெயர் பெற்ற அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய சர்வ வல்லமையும் பெற்ற அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகிமையில் அரசாளும் அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாயின் பிள்ளைகளின் பாதுகாவலியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வாழும் ஜெபமாலைக்குப் பாதுகாவலியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, மகா பெரிய அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்களாண்டவராகிய தேவனே, தனது உன்னதமான பரிசுத்தத்தினாலும் எல்லாப் புண்ணியங்களின் அனுசாரத்தாலும் உமது பார்வையில் எப்பொழுதும் பிரியமுள்ளவளா யிருக்கிற கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். பிலோமினம்மாளின் வேண்டுதலால் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்குத் தேவையா யிருக்கிற எல்லா வரப்பிரசாதங்களையும் (விரும்பிய வரத்தைச் சொல்லவும்) தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.

அர்ச். பிலோமினம்மாள் ஜெபம்

அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே! வேத சாட்சியான கன்னிகையே!  சர்வேசுரன் அனந்த புதுமைகளால் உம்மை மகிமைப்படுத்துகிறாரே! கிறீஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசர் உம்மை வாழும் ஜெபமாலைக்கும் மரியாயின் பிள்ளைகளுக்கும் பாதுகாவலியாக நியமித்துள்ளாரே! உம்முடையதைப் போன்ற பரிசுத்தமான குரல் மறுக்கப்பட முடியாதென்றும், உம்முடைய உதவியில் நம்பிக்கை கொள்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளதென்றும் மோட்சத்திலிருந்து தெளிவாக எங்களுக்குக் காண்பியும்.  சேசு கிறீஸ்துவுக்கு மரணத்திலும் பிரமாணிக்கமாயிருக்கும் வரப்பிரசாதத்தை எங்களுக்குப் பெற்றுத் தாரும். நாங்கள் கேட்கிற இவ்விசேஷ மன்றாட்டையும் .... எங்களுக்கு அருள்வீராக.

ஆமென்.

அர்ச். பிலோமினம்மாளின் பக்தி முயற்சிகள்

(திருநாள் : ஆகஸ்டு 11)

இக்கன்னியின் சிறப்பு

கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். பிலோமினம்மாளின் பூசிதமான அருளிக்கங்கள் உரோமை சுரங்கக் கல்லறைக்குள் 1500 ஆண்டுகள் மறைவிற்குப்பின், 1802-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி கிறீஸ்தவர்களின் சகாயமாதா திருநாளன்று கண்டெடுக்கப்பட்டன. 35 ஆண்டுகள் கழித்து இந்தக் கிரேக்க அரச குமாரி அர்ச்சியசிஷ்ட பட்டமளிக்கப்பட்டு பீட வணக்கத்திற்கு உயர்த்தப்பட்டாள். 19-ம் நூற்றாண்டின் புதுமை வரத்தி என்று போற்றப்பட்டாள்.  அத்தனைக்கதிக பிரபலமான புதுமைகள் அவளுடைய வல்லமை யுள்ள மன்றாட்டினால் நடந்தன.  உலகமெங்கும் அவளுடைய மகிமைக்காக சேத்திரங்களும் பீடங்களும் நினைவாலயங்களும் எழுப்பப்பட்டன. அர்ச். பிலோமினம்மாள் கடவுளிடம் வல்லமை பெற்றிருக்கிறாள்.

தனிச் சிறப்பு

நம்முடைய இந்த அல்லது அந்த தேவைகளில் நமக்கு உதவும்படி மற்ற அர்ச்சியசிஷ்டவர்களுக்கு அருளப்பட்டிருந்தால் அர்ச். பிலோமினம்மாளுக்கு நம் எல்லாத் தேவைகளிலும் உதவி செய்ய வரம் அருளப்பட்டது.  ஞான உதவிகளையும் இலெளகீக உதவிகளையும் அவள் செய்கிறாள். பெரும் நம்பிக்கையுடனும் அன்புடனும் விசுவாசத்துடனும் நாம் அவளை அணுகிச் செல்வோமாக!  அவள் சேசுவுக்கும், மாதாவுக்கும் பிரியமுள்ள மகளாயிருக்கிறாள். அவளுக்கு எதுவும் மறுக்கப்படுவதில்லை.

“என் பிள்ளைகளே!  அர்ச். பிலோமினம்மாள் கடவுளிடம் பெரும் வல்லமை படைத்திருக்கிறாள். அவள் வீர வைராக்கியமான வேதசாட்சியத்தை ஏற்றுக்கொண்டதில் அவளிடம் விளங்கிய கன்னிமையாலும் தாராள குணத்தாலும் எந்த அளவிற்கு அவள் கடவுளுக்குப் பிரியப்பட்டாளென்றால், நமக்காக அவரிடம் அவள் எதைக் கேட்டாலும் கடவுள் அதை மறுக்க மாட்டார்” என்றுரைக் கிறார் அர்ச். வியான்னி அருளப்பர் (கூரேதார்ஸ்).

பாப்பரசர் 13-ம் சிங்கராயர் அர்ச். பிலோமினம்மாளை “மகா பெரிய அர்ச்சியசிஷ்டவள்” என்று கூறுகிறார்.

முத்திப்பேறு பெற்ற பவுலின் ஜாரிக்கோ “பிலோமினம்மாள் என்னும் இப்பெரிய அர்ச்சியசிஷ்டவளிடம் முழு நம்பிக்கை வையுங்கள்.  நீங்கள் கேட்பதையெல்லாம் அவள் பெற்றுத் தருவாள்” என்கிறாள்.

ஒரு பேயோட்டும் சடங்கில் பசாசுக்கள் இவ்வாறு கூறியுள்ளன: “எங்களுடைய சபிக்கப்பட்ட எதிரி இப்பெரிய கன்னி வேதசாட்சியான அர்ச். பிலோமினாதான்.  அவள்மேல் ஏற்பட்டு வருகிற பக்தி நரகத்திற்கே ஒரு பயங்கரப் புதுப் போராட்டமாயிருக்கிறது.” 

பிலோமினம்மாளுக்கு எதுவும் மறுக்கப்படுவதில்லை. (பரிசுத்த மரியன்னை)