அர்ச். ஞானப்பிரகாசியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். ஞானப்பிரகாசியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். ஞானப்பிரகாசியார் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசில்லாத அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவமாதாவின் புதுமையினாலே பிறந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோக ஆவியை உட்கொள்ளுமுன்னே சேசுக்கிறீஸ்துநாதருடைய ஞானப் புத்திரனானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முந்தின வார்த்தையாக சேசு மரியாயே என்று உச்சரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புத்தியறிந்த கணமே உம்மை முழுமையும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த தேவ வரப்பிரசாதமடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ வரப்பிரசாதத்தில் நிலைகொண்ட அர்ச்சியசிஷ்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் அடைந்த தேவ வரப்பிரசாதத்தை அர்ச்சிக்கப் பண்ணினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மேலாங்கிஷத்துக்குக் கீழாங்கி­த்தை உத்தம மேரையாய்க் கீழ்ப்படியப் பண்ணினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒன்பது வயதில்தானே உமது கற்பை தேவ மாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம மனஸ்தாபத்தினாலே சோபமடைந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

போசனத்தில் ஆச்சரியமான ஒறுத்தல் செய் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடின தபசினால் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சரீரத்தை முழுதும் பகைத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒருக்காலும் மோக விசாரப்படாத பரிசுத்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்புக்கு விரோதமான சந்தோ­ம் அணுகா தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உள்ளிந்திரியங்களை தரும ஒழுங்கிலே நிலைப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பஞ்சேந்திரியங்களை அடக்கி மகா எச்சரிக் கையோடே காத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சரீரமுள்ள சம்மனசென்கிற பெயர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சரீரம் இல்லாதவரென்றும் சொல்லப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவமாதாவினால் சேசுசபைக்கு அழைக்கப் பட்டவரே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமக்குச் சொந்தமான துரைத்தனத்தைத் துறந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலக மகிமை பாக்கியத்தை முழுதும் புறக் கணித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அரண்மனையில் உள்ளவர்களுக்குத் தரும ஒழுக்கம் படிப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வாலிபரை அறநெறியில் நடத்தி வழி காண்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுற்றத்தார் பேரிலே பற்றுதலற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிந்தின இரத்தத்தைக் கொண்டு தகப்ப னுடைய மனதை இளகப் பண்ணி சந்நியாசியாக உத்தாரம் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். இஞ்ஞாசியாருக்குப் பிரியமுள்ள குமாரனானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மடத்திலே ஆறு வருடகாலம் பறக்கிற பட்சிக்கொத்த விரைவோடே ஞானக்காரியங் களில் விர்த்தித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுசபையின் கட்டளைகளைச் சாங்கோ பாங்கமாகச் செலுத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா சிரவணமுள்ள அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முழு தரித்திரத்தை அனுசரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்பினுடைய தார்ப்பரியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தியானத்தில் நெடுநேரம் செலவழித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபத்திலே அற்ப பராக்கில்லாதவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எப்போதும் எவ்விடத்திலும் பரவசமாயிருந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ காரியங்களை எளிதாய் யோசித்தறிந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞான நினைவை விடுகிறதிலே கஷ்டப்பட் டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீராத வர்ம மனஸ்தாபங்களைத் தீர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமாதானத்தை வருத்துவிக்கிற அர்ச். ஞானப் பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ழ்ச்சியில் உயர்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த சாது குணமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆச்சரியமான பொறுமையுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறர்மேல் மகா சிநேகம் வைத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவசிநேக மிகுதியினாலே பக்திச்சுவாலக ருக்கு ஒப்பானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருக்காயங்களின் பேரில் வெகு பக்தி வைத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ நற்கருணைக்கு உத்தம ஆராதனை செய்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவமாதாவினுடைய வியாகுலங்களின் பேரில் மிகுந்த இரக்கமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சந்நியாசிகளுக்கு உன்னத படிப்பினையான வரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அடுத்திருக்கிற மரணத்தை அறிந்து அகமகிழ்ந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறர் சிநேகத்தினாலே பிராணனைச் செல வழித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திரு இருதயத் திருநாளிலே பாக்கியமான மரணத்தை அடைந்த அர்ச்சியசிஷ்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசில்லாத்தனத்தினாலே பரகதிக்குச் சென்ற வரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆச்சரியமான தபசினாலே மிகுந்த மோட் சானந்தம் அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவசிநேக மிகுதியினால் உயர்ந்த பத்திராச னத்திலிருக்கின்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெலனும் உதாரமும் இரக்கமுமுள்ள அர்ச். ஞானப் பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எண்ணிக்கையில்லாத பாவிகளுடைய மனதை திருப்பினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரரைக் குணமாக்குகிற ஞான சஞ்சீவியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இக்கட்டுகளை விலக்குகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோக சேற்றிலே அசுத்தப்பட்டவர்களை கற்பினால் சுத்தமாக்குகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்பைக் காக்கிற அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இக்காலத்திலே எண்ணிக்கையில்லாத அதிசயங்களைச் செய்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைப் பிரார்த்திக்கிற சகலருடைய மன்றாட்டுகளை அடையச் செய்கிற அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக் காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வாதி கர்த்தராகிய சர்வேசுரா!  தேவரீர் ஞானப்பிரகாசியாரை சிறுவயதில்தானே தெரிந்து கொண்டு அவர் ஓர் அற்பக் குற்றம் முதலாய் இல்லாதிருக்கவும், எல்லோரும் ஆச்சரியப்படத் தக்க கடின தபசு பண்ணவும் பரிபூரண ஆசீர் வாதம் கொடுத்தருளினீரே. அவருடைய பேறு பலன்களையும் மன்றாட்டுகளையும் பார்த்து, நாங்கள் இதுவரைக்கும் பாவிகளாய் இருந்தாலும் இனிமேலாகிலும் அவரைப் போலே பாவம் இல்லாதிருக்கவும், அவருடைய உத்தம தபசை நாங்கள் அனுசரித்து நடக்கவும், எங்களுக்கு அனுக்கிரகம் பண்ணியருள வேணுமென்று தேவ ரீரை மன்றாடுகிறோம்.  இந்த மன்றாட்டுக்களை யயல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.  

ஆமென்.

அர்ச். ஞானப்பிரகாசியார் மூலம் கேட்கும் ஆறு மன்றாட்டுக்கள்

அர்ச். ஞானப்பிரகாசியார் சந்நியாசிகள் மடத்தில் ஆறு வருடம் இருந்ததைக் குறித்து ஆறு மன்றாட்டுக்களைக் கேட்டு 6 பர. அருள். திரி. சொல்லி வேண்டிக் கொள்ளுகிறது.

1. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் அடைந்த தேவ இஷ்டப்பிரசாதத்தை மரண பரியந்தம் இழந்து போகாமல் அதில் நிலை கொண்டவராய் நடந்தீரே.  அப்படியே நாங்கள் தேவ இஷ்டப்பிரசாதத்தைக் கைக்கொண்டு, அதை மரண பரியந்தம் இழந்து போகாமல் இருக்கத்தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய் தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

2. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர்   புத்தியறிந்த ஏழு வயதிலே சர்வேசுரனை முழு மனதோடே நேசித்துப் புண்ணிய வழியிலே சாங்கோபாங்கமாக நடக்கத் துவக்கி, மென் மேலும் அதிகமதிகமாக மரண பரியந்தம் புண்ணி யங்களிலே வர்த்தித்துக் கொண்டு வந்தீரே;  நாங்கள் இதுவரைக்கும் சர்வேசுரனை சிநேகி யாமல் அநேக பாவங்களைக் கட்டிக் கொண் டிருந்தாலும், இனியாகிலும் சர்வேசுரனை முழு மனதோடே நேசித்து அவருக்கு ஏற்க நடந்து புண்ணியங்களிலே அதிகரிக்கத்தக்கதாக, எங்க ளுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

3. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் ஒன்பது வயதிலே தேவமாதாவுக்குத் தோத்திர மாக உமது கற்பை ஒப்புக்கொடுத்து அதற்கு அற்பமாகிலும் மாசணுகாதபடிக்கு ஆச்சரியமான தபசு செய்து பஞ்சேந்திரியங்களைக் காக்கிறதிலே அதிசயமான எச்சரிக்கையோடே நடந்து வந்தீரே; நாங்கள் இதுவரைக்கும் கற்புக்குப் பழுதாக நடந்திருந்தாலும், இனிமேல் சரீரத்தை ஒறுத்து, மேலான தபசுகளினால் அதைக் கீழ்ப்படுத்தி, எச்சரிக் கையோடே பஞ்சேந்திரியங்களைக் காத்து மரண பரியந்தம் பரிசுத்த கன்னிகையாயிருக்கிற தேவ மாதாவுக்குத் தோத்திரமாகப் பழுதற்ற கற்போடே நடக்கத்தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடு கிறோம். பர. அருள். திரி.

4. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் இந்த உலக மகிமை துரைத்தன முதலான நன்மை யயல்லாம் வெறுத்து, சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படுகிறதற்குச் சந்நியாசிகள் மடத்திலே சேர்ந்து, அங்கே பிரியாத மனதாய்ச் சம்மனசு போல, சர்வேசுரன் பேரில் எப்போதும் முழுக் கருத்தாயிருந்து ஆண்டவருக்குத் தோத்திரம் செய்து கொண்டு வந்தீரே; நாங்கள் இந்தப் பிரபஞ்ச நன்மைகளின் ஆசையினாலே எங்கள் ஆத்துமத்துக்குச் சேதம் வருத்திக் கொள்ளாமல் உத்தம கருத்தோடே ஆண்டவரைச் சேவிக்கத் தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

5. அர்ச். ஞானப்பிரகாசியாரே! தேவரீர் இந்தப் பூலோகத்திலே சஞ்சரித்த கொஞ்ச நாளுக்குள்ளே அநேக புண்ணியங்களைச் செய்து வெகு ஞானத் திரவியங்களைச் சம்பாதித்து மரண காலத்திலே பலன் கைக்கொள்ளுகிற நேரம் வந்தது என்று விசாரித்து உம்மாலே சிநேகிக்கப் பட்ட சர்வேசுரனைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு, இதோ மோட்ச பேரின்பத்தை அனுபவிக்கப் போகிறேன் என்று சந்தோஷமாய்க் காலம் பண்ணினீரே!  நாங்கள் புண்ணிய நெறி யிலே சுறுசுறுப்போடே நடந்து, மரண சமயத் திலே பயந்து தத்தளியாமல் அமரிக்கையோடே நல்ல மரணம் அடையத்தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

6. அர்ச். ஞானப்பிரகாசியாரே! அர்ச். மரிய மதலேனம்மாளும், மகாத்துமாவாகிய அற்றிஸ் என்கிறவளும் தரிசனத்திலே கண்டபடியே தேவரீர் மோட்சத்திலே மனோவாக்குக்கெட்டாத பாக்கியத்தை அனுபவித்து இந்தப் பரதேசத் திலுள்ள மனுமக்களுக்கு வேண்டிய உபகாரங் களைச் செய்கிறதற்கு சர்வேசுரனாலே வரம் பெற்றிருக்கிறீரே; பாவிகளாயிருக்கிற எங்கள் பேரிலே உம்முடைய தயாபமுள்ள கண்களைத் திருப்பி, ஆத்தும சரீரத்துக்கு வேண்டிய அவசரங்களிலே உதவி செய்து காப்பாற்றி, மோட்ச இராச்சியத்திலே உம்மோடு கூட முடிவில்லாத பாக்கியத்தை அனுபவிக்கத் தக்கதாக, எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

தேவ வரப்பிரசாதங்களைத் தந்தருளுகிற சர்வேசுரா! அர்ச். ஞானப்பிரகாசியாரிடத்திலே அதிசயமான பரிசுத்த நடக்கையும் ஆச்சரியத்துக் குரிய தபசும் விளங்கப் பண்ணினீரே. அவருடைய மாசில்லாத நடக்கையைப் பார்த்து நடக்காத நாங்கள் அவருடைய புண்ணியங்களினாலேயும் வேண்டுதலினாலேயும் அவருடைய தபசைப் பின்செல்லத்தக்கதாக, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குக் கிருபை செய்தருளும் சுவாமி.  

ஆமென்.

அர்ச். ஞானப்பிரகாசியாரை நோக்கி கற்பென்கிற புண்ணியத்தைக் கேட்கும் ஜெபம்

(திருநாள் : ஜு ன் 29)

இவ்வுலகில் சம்மனசைப் போல் பரிசுத்தராய் நடந்த அர்ச். ஞானப்பிரகாசியாரே! உமது அபாத்திர ஊழியனாகிய அடியேன் விசேஷ பயபக்தியோடே என்னுடைய ஆத்தும சரீர கற்பை உமது அடைக்கலத்திலே வைக்கிறேன். அதை உமது பரிசுத்த கற்போடு ஒன்றாகக் கூட்டி செம்மறிக் குட்டியான சேசுக் கிறீஸ்துநாதருக்கும், கன்னிகைகளுக்கு இராக்கினியான பரிசுத்த தேவமாதாவுக்கும் ஏற்ற பாத காணிக்கையாக ஒப்புக் கொடுத் தருளும். அடியேன் சாவான பாவத்திலே விழாத படிக்கும், யாதொரு துர்க்கந்த மோக பாவத்தைக் கட்டிக்கொள்ளாதபடிக்கும் என்னைக் காத்து, நான் சோதனையிலேயும், பாவச் சமயத்திலேயும் இருக்கிறபோது, தேவரீர் என் இருதயத்திலே நின்று அசுசியான நினைவுகளையும், ஆசைகளையும் அகற்றி, நித்திய மோட்ச பாக்கியத்தையும், நரக ஆக்கினைகளையும் எனக்காகச் சிலுவையில் அறையுண்டு மரித்த சேசுக்கிறீஸ்துநாதரையும் நினைப்பூட்டி, தேவபயத்தை என் இருதயத்தில் உறுதியாய்ப் பதியச்செய்து, நான் இவ்வுலகில் உம்மைக் கண்டுபாவித்தபின் உம்மோடுகூட பரகதியில் தேவதரிசனை அடையும்பொருட்டு தேவ சிநேக அக்கினியை என் இருதயத்திலே எரியப் பண்ணியருளும். 

ஆமென். 

பர. அருள். திரி.

(செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டு பக்தியோடு இதை செபிக்கும் ஒவ்வொரு விசைக்கும் 100 நாள் பலனை 7‡ம் பத்திநாத ரென்னும் அர்ச். பாப்பானவர் அளித்தருளினார்).