திருச்சபையின் ஒளியே,
சத்தியத்தின் போதகரே,
பொறுமையின் ரோஜாவே,
கற்பின் வெண்தந்தமே,
ஞான நீரை நீர் வெகு
உதாரமாய்ச் சொரிந்தீர்.
வரப்ரசாதத்தின் போதகரே,
முத்தரோ டெம்மைச் சேர்த்தருளும்.
சீவன் பறந்து போய்விடினும் உம்மவரைக்
காப்பீரென நீர் தந்த திருவாக்கினால் உம்
சுவாசம் குன்றி மரணம் அண்டி வந்த வேளையிலும்
அவர்க்கினிய நம்பிக்கையின் ஆறுதல் தந்தீர்.
நோயுற்றோர் மத்தியில் தேவவல்லமைகளோடு
நினைத்த போதில் ஒளியிற் துலங்கிய அற்புதரே,
அல்லலுற்ற எம் ஆத்துமங்களிலும் உயிர்தரும்
கிறீஸ்துவின் பரிகாரத் திருவருளைப் பொழிவீரே.
பிதாவுக்கும் சுதனுக்கும் தேவ ஆவியானவர்க்கும்
நித்யமும் ஸ்தோத்திரமுண் டாவதாக.
தந்தாய், நம் ஆண்டவரிடம் எங்களுக்காய்
மன்றாடுவீரெனும் உம்வாக்கைக் காத்தருளும். ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- எங்கள் பணிகள்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தமிழ் வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயங்கள்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- நூலகம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- மரியன்னைக்கான போர்
- English Books
- Donation
- Disclaimer
- Contact Us
அர்ச். சாமிநாதர் பாடல்
Posted by
Christopher