நெஞ்சார ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன் ***

நெஞ்சார ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன்
நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன்

1. ஆண்டவர் செயல்கள் மகத்தானவை -
இன்பம் அவற்றில் கொள்வோர் உய்த்துணர்வார்
மாண்புமிக்க அவர் தம் செயல் யாவும்
என்றும் மலைபோல் அவர் தம் நீதி நிலைக்கும்

2. வியத்தகு செயல்கள் நினைவினிலே - என்றும்
விளங்கிட அவரே செய்தாரே
தயவுடன் அன்பும் உள்ளவரே - அவர்
தமக்கஞ்சும் மனிதர்க்கு உணவளித்தார்