தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே ***

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே 
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும்

1. அன்னை மரி சுதனை - புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை

3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள் 
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு 
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி