ஏந்திய தட்டினிலே இறைவா எம்மையே எடுத்து வந்தோம் ***

ஏந்திய தட்டினிலே இறைவா எம்மையே எடுத்து வந்தோம்
எளியோர் எம் காணிக்கையை ஏற்றிட வேண்டுகின்றோம்

1. தண்ணீர் இரசத்துடனே எமது கண்ணீர் மகிழ்ச்சிகளை
கலந்தே அளிக்கின்றோம் கனிந்தே ஏற்றருள்வீர்

2. ஏற்ற பலிப்பொருளை மகனாய் மாற்றும் இறைவா நீர்
உம் மகன் உருவினிலே எம்மையும் மாற்றிடுவீர்