எத்தனை திரள் என் பாவம், என் தேவனே! எளியன்மேல் இரங்கையனே ***

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே 
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே

1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா!

2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும்!

3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே!

4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே!