அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா ***

அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அருளைப் பொழிவதும் நீதானம்மா
ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா

1. மணிமுடி அணிந்த மாதவளே - இந்த
மாநிலம் காத்திடும் தூயவளே
உண்மையை ஊட்டிடும் பேரழகே - எந்தன்
உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே

2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே - நீ
துணை தந்து காத்திட வேண்டுமம்மா
அன்பினில் என்றுமே அரவணைத் தென்னை
அருளினில் வளர்த்திட வேண்டுமம்மா