தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுரமாமே ***

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் 
திவ்விய மதுரமாமே அதைத் 
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 

1. காசினிதனிலே நேசமதாகக் 
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் 
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் 
கண்டுனர் நீ மனமே

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் 
தாமே ஈந்தவராம் - பின்னும் 
நேமியாம் கருணை நிலைவரமுண்டு 
நிதம் துதி மனமே

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் 
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் 
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு 
கருத்தாய் நீ, மனமே 

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல 
துணைவராம் நேசரிடம் - நீயும் 
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் 
ஆசை கொள் நீ மனமே

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் 
புகழ்ந்து போற்று நாமம் - அதைப் 
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் 
புகுவாய் நீ மனமே