இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா ***

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாயே

1. ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள்
மாறாத கொடுமை நீங்காத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாள்

2. கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையை
வெள்ளம் போல் அருள் கருணை பாய்ந்திட
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய்