இறைவனின் பலியில் இணைந்திட வருவோம் ***

இறைவனின் பலியில் இணைந்திட வருவோம்
இறைவன் அழைக்கின்றார் இனிதே அழைக்கின்றார்
துன்பமில்லை துயரமில்லை இறைவனின் உறவினிலே
வாழ்வுண்டு வழியுண்டு இறைவனின் துணையினிலே

1. அடிமைத்தளையிலிருந்து அன்று முன்னோரை மீட்ட தேவன்
பாவத்தளையிலிருந்து நம்மை மீட்கவே அழைக்கின்றார்

2. அடிமை என்றழைக்கவில்லை நம்மை நண்பர்கள் என்றாரே
உரிமை வாழ்வு வழங்க நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார்