ஃபெப்ரவரி 5 - சிசிலியின் புனிதர் அகதா ***


சிசிலியின் புனிதர் அகதா

(St. Agatha of Sicily)

கன்னி மற்றும் மறைசாட்சி:

(Virgin and Martyr)

பிறப்பு: கி.பி. 231

கேட்டனியா அல்லது பலெர்மோ, சிசிலி

(Catania or Palermo, Sicily)

இறப்பு: கி.பி. 251

கேட்டனியா, சிசிலி

(Catania, Sicily)

ஏற்கும் சபை/ சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Churches)

ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodoxy)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 5

பாதுகாவல்:

கேட்டனியா (Catania), மோலிஸ் (Molise), மால்ட்டா (Malta), சேன் மரினோ (San Marino), ஸ்பெயின் நாட்டின் செகோவியா பிராந்தியத்திலுள்ள 'ஸமர்ரமல' என்னும் ஊர்ப்பஞ்சாயத்து (Zamarramala, a municipality of the Province of Segovia in Spain), மார்பக புற்று நோயாளிகள் (Breast cancer patients), மறைசாட்சிகள் (Martyrs), செவிலியர் (Wet Nurses), கலிபோர்னியாவின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள "பெல்" என்ற நகரை கண்டுபிடித்தவர்கள் (Bell-Founders), ரொட்டி செய்யும் தொழிலாளி (Bakers), தீ (Fire), பூகம்பம் (Earthquakes), "எட்னா" மலையின் வெடிப்புகள் (Eruptions of Mount Etna).

சர்ச்சைகள் (Controversy):

ரோமப் பேரரசர்களை வணங்க மறுத்தல்

(Rejection to worship Roman Emperors)

கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொழில்

(Forced prostitution)

பாலியல் வன்கொடுமை, மற்றும் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதற்கான போர்

(Rape and conflict to maintain virginity)

புனிதர் அகதா, மறைசாட்சியாக மரித்த ஒரு கன்னியரும், கிறிஸ்தவ புனிதருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலியின்போது, கடவுளை அதிதூய அன்னை, அர்ச்சிஷ்ட்ட கன்னி மரியாளுடன் சேர்ந்து நினைவுகூறப்படும் ஏழு பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பழங்கால கிறிஸ்தவ புராணத்தில், மிகவும் உயர்வாக போற்றப்படும் கன்னியராக மறைசாட்சியாக மரித்த பெண்களுள் புனிதர் அகதாவும் ஒருவர் ஆவார். கி.பி. 249ம் ஆண்டு முதல் 253ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், ரோமப் பேரரசை ஆண்ட பேரரசன் "டேசியஸ்" (Full Name - Gaius Messius Quintus Trajanus Decius) என்பவன் கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகளை ஆரம்பித்து வைத்த முதல் பேரரசன் ஆவான். இவனது காலத்திலேயே புனிதர் அகதா, சிசிலியில் உள்ள “கேட்டனியா” (Catania) என்னும் இடத்தில் வைத்து, தமது மிக உறுதியான கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

வசதிவாய்ப்புகளுள்ள குடும்பமொன்றில் பிறந்த அகதா, ஆன்மீகத்தில் ஈடுபாடு மிகக்கொண்டிருந்தார். தமது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்ற தீவிர விசுவாசம் கொண்டிருந்தார். "ஜாகொபஸ் டி வொராஜின்" (Jacobus de Voragine) என்ற கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரின் (Legenda Aurea of 1288 AD) எனும் இலக்கியத்தின்படி, அகதா தமது கன்னிமையை இறைவனுக்கே அர்ப்பணித்தார். இவருக்கு பதினைந்து வயதானபோது, இவர்மீது மோகம் கொண்ட ரோமன் நிர்வாக அலுவலரான (Roman prefect) "குயின்ஷியானஸ்" (Quintianus) என்பவனை தீர்க்கமாக நிராகரித்தார். ஆத்திரம் கொண்ட குயின்ஷியானஸ், இவரை இவரது கிறிஸ்தவ விசுவாசத்துக்காக துன்புறுத்தினான். பின்னர், "அப்ரோடிசியா" (Aphrodisia) என்ற விபச்சார விடுதி நடத்துபவனிடம் அனுப்பினான்.

அவரை எளிதில் கையாள முடியாது என்பதை கண்டுகொண்ட குயின்ஷியானஸ், அகதாவை பயமுறுத்தினான். அவருடன் வாதிட்டான். இறுதியில் அவரை சிறையில் அடைத்தான். சிறையில் எண்ணற்ற சித்திரவதைகளுக்கு ஆளான அகதாவின் மார்பகங்களை குறடு போன்ற இடுக்கியால் அறுத்தனர். மேற்கொண்டும் அவனுக்கு மசியாத அகதா அவனுடன் வியக்கத்தக்க வகையில் வாதிட்டு தமது மனோபலம் மற்றும் உறுதியான பக்தியைக் காண்பித்தார்.

இறுதியில், அகதாவை கூறிய மரக்குச்சுகளினால் தீயிட்டு எரித்துக் கொள்ள தீர்ப்பிடப்பட்டது. ஆனால் அவரது விதி, அவரை ஒரு பூகம்பம் மூலம் இரட்சித்தது. மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட அகதாவுக்கு அப்போஸ்தலரான புனிதர் பேதுரு (St. Peter the Apostle) காட்சியளித்து அவரது மார்பக மற்றும் உடலிலிருந்த காயங்களை ஆற்றினார். புனிதர் அகதா சிறையிலேயே மரித்துப் போனார். "கட்டானியா" பேராலயம் (Catania Cathedral) இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.