எல்லையில்லாத அன்பாலே ***

எல்லையில்லாத அன்பாலே - உம்
ஏக மகனை எமக்களித்த பிதாவே
ஏற்றருள்வீர் எம் பலிப்பொருள் இதனை
கல்மனம் வெயில் முன் பனிமலை போலே
கசிந்துருகிடுமே உன் நினைவாலே

1. புலன்களை அடக்கி உணவினைக் குறைத்து
புரிந்திடும் ஒறுத்தல் முயற்சிகள் அனைத்தும்
நலன்களின் சுனையே உமக்களிக்கின்றோம்
நலிந்திடும் எளியோர் வலிபெறச் செய்வீர்

2. உடலினை ஒடுக்கி புண் செயல் அகற்றி
உளத்தை எப்பொழுதும் மேலே உயர்த்தி
இடர்களைப் பொறுத்து உம் சுதனோடு
இனிதுமைப் புகழும் வரமருள்வீரே