மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ***

மீட்புக்காக நன்றி கூறிடுவேன்
ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்

1. ஆண்டவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நான் என்ன கைம்மாறு செய்வேனோ
நான் போற்றிடுவேன் ஆ பாடிடுவேன் ஆ புகழ்ந்திடுவேன்

2. என்மீது அவரது அருளன்பு நிலைத்தது
புகழ்ச்சி பலியினைச் செலுத்திடுவேன்

3. அவரே என் வலிமையும் திடமுமாய் இருக்கிறார்
அவரே எனக்கு மீட்பானார்