இதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய் ***

இதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய்
நான் பலியின் பொருளை உணர்ந்து வாழ
எனையே மாற்றிடுவாய்

1. பொன்னையோ பொருளையோ
இறைவா நீ கேட்கவில்லை
தினம் என்னையே பிறர்க்கென அளிக்க வேண்டுகிறாய்
எந்நலம் தவிர்த்து நான் பணிகள் செய்திடுவேன்
என்னை ஏற்று பலியாக மாற்று

2. ஏழைகள் வாழ்விலே தினம் தினம் துயரமே
என்றும் அழுதிடும் விழிகளில் நிறைந்த சோகமே
துயரம் போக்க என்னை பலியாய் தந்திடுவேன்
என்னை ஏற்று பலியாக மாற்று