இசையிலே நாதம் கேட்டோம் அதிலே
இன்னருள் வடிவம் கண்டோமே
எழுந்தோம் இறைகுல உரிமையிலே இறைவா ஆ
தொழுதோம் அவரை பலியாக
1. படைத்தாய் படைப்பை எமக்காக
படைத்தோம் அதனை உமக்காக
கொடுத்தாய் மகனை எமக்காக தேவா ஆ
கொடுத்Nதாம் அவரை பலியாக
2. உள்ளம் உள்ளது எம்மிடமே
உரிமையே உண்டு உம்மிடமே
நாங்கள் போவது எவ்விடமே நாதா ஆ
நாளுமே பணிவோம் உம்மிடமே