இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா ***

இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன்

1. தம் சிறகுகளால் உன்னை மூடிக் காப்பார்
அவருடைய இறக்கைகளுக்கடியில் நீ
அடைக்கலம் புகுவாய்
தவறாத அவருடைய வார்த்தை உனக்கு
கேடயமும் கவசமும் போல் இருக்கும்

2. தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடத்தை நெருங்காது
ஏனெனில் நீ செல்லும் இடங்களில் எல்லாம்
உன்னைக் காக்கும்படி தம் தூதருக்கு
உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்

3. அவன் என்னையே சார்ந்திருப்பதால்
அவனை விடுவிப்பேன்
என் பெயரை அறிந்ததால் அவனைக் காப்பாற்றுவேன்
என்னை நோக்கிக் கூப்பிடுவான்
அவன் ஜெபத்தைக் கேட்பேன்
துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்
அவனைத் தப்புவித்துப் பெருமைப்படுத்துவேன்