ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் ***

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் கிறிஸ்தேசுவையே துதிசெய் 

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க