அன்னைக்குக் கரம் குவிப்போம் ***

அன்னைக்குக் கரம் குவிப்போம் - அவள்
அன்பைப் பாடிடுவோம்

1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள்
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள்
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

2. பாவமதால் மனிதன் அருள் இழந்தான் - அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள்
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார்
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

3. அன்னைமரி உலகில் வாழ்ந்த வழி - நாம்
சென்றிடுவோம் அதுவே சிறந்த வழி
நல்வழி நாடிடும் யாவரு மின்று
நல்வழி கண்டிடச் செய்திடுவோம்