காணிக்கை தர வந்தோம் ***

காணிக்கை தர வந்தோம்
கலங்கிய எங்களின் நெஞ்சங்களை
காணிக்கை தரவந்தோம்
கருணைமிகும் உந்தன் பாதங்களில்

1. உண்மை உறங்கிடலாம் உள்ளம்
இருளினில் மூழ்கிடலாம்
உன்னதன் உன்னை உணர்ந்துவிட்டால் - அந்த
இருளிலும் அருள் ஒளி தென்படுமே
துன்பம் மறைந்திடவும் துயரங்கள் களைந்திடவும்
தேவனுன் பாதத்தில் சரணடைந்தோம்

2. இரசத்துடன் நீர் கலந்து உந்தன்
திரு விலா குருதி கண்டோம்
சிந்திடும் உந்தன் அன்பின் துளிகள் - ஏந்தி
இதயத்தை மலரெனப் படைத்துவிட்டோம்
பன்மை மறைந்திடவும் பகைமை அழிந்திடவும்
பரமனுன் பாதத்தைப் பணிந்திடுவோம்