இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல்வேளையிலே ***

இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல்வேளையிலே
இதயங்களின் சங்கமமே இறையரசின் மங்களமே

1. உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம்
மனங்கள் அன்பில் இணையும் - அருள்
மழையில் மலர்ந்து நனையும்
குறைகள் யாவும் இங்கு கரைந்திடுமே - மன
நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே

2. அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில்
அடிமைக் கோலம் ஒழியும்
அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும்
பயணம் இனிது இங்கு தொடர்ந்திடவே - அன்பின்
பாதை பாரெங்கும் படர்ந்திடுமே