அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே ***

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ