காணிக்கைப் பொருட்களை கரங்களில் ஏந்தி ***

காணிக்கைப் பொருட்களை கரங்களில் ஏந்தி
உன் பீடம் வந்தோம் இறைவா
ஏற்றுக்கொள்வாய் இறைவா

1. மலர்களில் பல வகை அதில் மணமில்லா சிலவகைகள்
அவை அழகுற உன் பீடம் அலங்கரிக்க
நாங்களும் கூடிவந்தோம் எம்மையும் ஏற்றுக்கொள்வாய்

2. பிறர்பகை மறந்தன்புடன் என் பீடம் நீ வாவென்றாய்
பகைமறந்தே மலர் கனிப்பொருள் ஏந்தி
உன் பீடம் வந்தோம் இறைவா எம் பலி ஏற்றுக்கொள்வாய்