எக்காளப் பண்டிகையிலும், பாவநிவர்த்தித் திருவிழாவிலும், கூடாரத் திருநாளிலும் செலுத்த வேண்டிய பலி இன்னதென்று சொல்லுகிறது.
1. அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதி உங்கட்குப் பரிசுத்தமும் வணக்கத்துக்குரியதுமான நாளாயிருக்கும். அது எக்காளம் முழங்கும் நாளாகையால் அன்று எந்தச் சாதாரண வேலையையும் செய்யாதிருப்பீர்கள்.
2. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு அதிசுகந்த வாசனையுடைய தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஓரிளங் காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
3. அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மாவிலே நாளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
4. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
5. பிரசைப் பாவத்துக்குப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் ஒப்புக்கொடுப்பீர்கள்.
6. அதல்லாமலும் மாதப் பிறப்புக்குச் செலுத்த வேண்டிய சர்வாங்கத் தகனப்பலியையும், அதற்கடுத்த போஜனப் பலியையும், நித்திய சர்வாங்கத் தகனப் பலியையும், அதற்கடுத்த வழக்கமான பானப்பலியையும் ஒப்புக்கொடுப்பீர்களே யன்றிச் சாதாரண முறைமைக்கேற்றபடி சுகந்த வாசனையான ஒரு சர்வாங்கத் தகனப் பலியையும் கர்த்தருக்குச் செலுத்தக் கடவீர்கள்.
7. இந்த ஏழாம் மாதம் பத்தாந் தேதியும் உங்களுக்கு அர்ச்சிக்கத் தக்கதும் வணக்கத்துக்குரியதுமான நாளாயிருக்கும். அதிலே நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி அன்று யாதொரு சாதாரண வேலையையும் செய்யலாகாது.
8. கர்த்தருக்கு அதிசுகந்த வாசனையுடைய சர்வாங்கத் தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு இளங்காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும் செலுத்துவீர்கள்.
9. அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
10. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகப் பத்தாம் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,
11. பாவத்துக்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்த வேண்டியதல்லாமல் குற்ற நிவிர்த்தியைப் பற்றியும் நித்திய சர்வாங்கத் தகனப் பலியைப் பற்றியும் வழக்கமாகக் கொடுக்கப் படுகிற காணிக்கைகளையும் அந்தந்தப் பலிக்கு அடுத்த போஜனப் பானப் பலிகளையும் (படைக்க வேணடும்.)
12. ஏழாம் மாதம் பதினைந்தாந் தேதி உங்களுக்குப் பரிசுத்தமும் வணக்கத் துக்குரியதுமான நாளாயிருக்கும். அதில் நீங்கள் சாதாரண வேலை ஒன்றும் செய்யலாகாததுந் தவிர ஏழு நாள் கர்த்தருடைய பண்டிகையைக் கொண்டாடக் கடவீர்கள்.
13. அந்நாளிலே கர்த்தருக்கு அதி சுகந்த வாசனையுடைய சர்வாங்கத் தகனப் பலியாக ஒரு மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட பதிமூன்று இளங்காளை களையும், இரண்டு ஆட்டுக்கடாக் களையும், ஒரு வயதான மாசற்ற பதினாலு ஆட்டுக் குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
14. அகைளுக்கடுத்த பானப் போஜனக் காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்காகப் பத்தில் மூன்று பங்கையும் இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
15. பதினாலு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்காகப் பத்தாம் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,
16. நித்தியத் தகனப்பலியும் அதுக்கடுத்த பானப் போஜனக் காணிக்கையுமன்றி பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
17. இரண்டாம் நாளிலே ஒரு மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பதினாலு மாசற்ற ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டியதாகும்.
18. இரீதி முறைமைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கடாவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பானப் போஜனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
19. நித்திய சர்வாங்கத் தகனப் பலியும், அதுக்கடுத்த பானப் போஜனக் காணிக்கைகளையுமன்றி பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.
20. மூன்றாம் நாளிலே பதினொரு கன்றுக்குட்டிகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான மாசற்ற பதினாலு ஆட்டுக் குட்டிகளையும் கொண்டு வர வேண்டியதாகும்.
21. இரீதி முறைமைப்படி ஒவ்வொரு கன்றுக்குட்டி, ஆட்டுக்கடா, ஆட்டுக்குட்டி இவைகளுக்கடுத்த பானப் போஜனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
22. நித்திய சர்வாங்கத் தகனப்பலியையும், அதற்கடுத்த பானப் போஜனக் காணிக்கையையுமன்றி பாவப்பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.
23. நான்காம் நாளிலே பத்து இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் ஒரு வயதான மாசற்ற பதினாலு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டியதாகும்.
24. இரீதி முறைமைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கடாவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பானப் போஜனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
25. நித்திய சர்வாங்கத் தகனப் பலியையும் அதற்கடுத்த பானப்போஜனக் காணிக்கைகளையுமன்றி பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.
26. ஜந்தாம் நாளிலே ஒன்பது இளங்காளைகளையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும, ஒரு வயதான மாசற்ற பதினாலு ஆட்டுக் குட்டிகளையும் கொண்டு வரவேண்டியதாகும்.
27. இரீதி முறைமைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கடாவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பானப் போஜனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
28. நித்திய சர்வாங்கத் தகனப் பலியையும் அதற்கடுத்த பானப்போஜனக் காணிக்கைகளையுமன்றி பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.
29. ஆறாம் நாளிலே எட்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பதினாலு மாசற்ற ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டியதாகும்.
30. இரீதி முறைமைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கடாவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பானப் போஜனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
31. நித்திய சர்வாங்கத் தகனப் பலியும், அதுக்கடுத்த பானப் போஜனக் காணிக்கைகளையுமன்றி பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.
32. ஏழாம் நாளிலே ஏழு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பதினாலு மாசற்ற ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டிய தாகும்.
33. இரீதி முறைமைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கடாவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பானப் போஜனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
34. நித்திய சர்வாங்கத் தகனப் பலியும், அதுக்கடுத்த பானப் போஜனக் காணிக்கைகளையுமன்றி பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.
35. அதிபிரதாபமுடைய எட்டாம் நாளிலே எந்தக் கூலிவேலையும் செய் யாமல்,
36. கர்த்தருக்கு அதிசுகந்த வாசனையுடைய சர்வாங்கத் தகனப் பலிக்கு ஓர் இளங்காளையையும் ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
33. இரீதி முறைமைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கடாவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பானப் போஜனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
34. நித்திய சர்வாங்கத் தகனப் பலியும், அதுக்கடுத்த பானப் போஜனக் காணிக்கைகளையுமன்றி பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.
39. நீங்கள் உங்கள் திருவிழாக்களில் கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய பலிகள் இவைகளேயாம். அதல்லாமலும் நீங்கள் பொருத்தனைகளையும் தகனப் பலிக்காகக் கொண்டு வரும் உற்சாகக் காணிக்கைளையும், மற்றுமுள்ள பானப் போஜனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் (வழக்கப்படி) செலுத்துவீர்கள் என்று திருவுளம் பற்றினார்.