சோம்பலுக்கான தீர்வு

சோம்பலை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் நம்மில் உள்ள சோம்பலின் மீதான நாட்டங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்த வேண்டும்; மேலும் ஜெபத்திலும், தேவத் திரவிய அனுமானங்களிலும் உதவி தேட வேண்டும். பொதுத் தீர்வை நாளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது மந்தமான சித்தத்தைத் தட்டியெழுப்ப ஞான வாசகம் நமக்கு உதவும். ஆயினும் எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்பிரீத்து சாந்துவானவரிடம் பக்தி கொண்டிருப்பது மிகுந்த வல்லமையுள்ளதாக இருக்கும். ஏனெனில், சிநேகமல்ல, பயமே சோம்பலைத் தூண்டி நடத்துகிற ஆதாரமாக இருக்கிறது. இஸ்பிரீத்து சாந்துவானவரோ நேசத்தின் இஸ்பிரீத்துவாகவும், அதன் ஆதாரமாகவும் இருக்கிறார். சோம்பலுக்கு எதிரான மாற்று மருந்தாகிய தேவ சிநேகத்தைக் கண்டடையும்படி நாம் அவரிடம்தான் செல்ல வேண்டும். நம் இருதயங்களுக்குள் சிநேகத்தை ஊற்றும்படியாக அவரிடம் நாம் கெஞ்சி மன்றாட வேண்டும்.