அர்ச். சூசையப்பர் நவநாள் - 9 ம் ஜெபம்

5-வது: தேவ சிநேகம் அடைய ஜெபம்

தேவசிநேகத்தில் மகா ஐஸ்வரியமுடைய வரான அர்ச். சூசையப்பரே! சகல திரவியங்களிலும் மகா அபூர்வமான திரவியமாகிய தேவசிநேகத்தை நான் அடைய எனக்காக சர்வேசுரனை மன்றாடும். என்னைப் படைத்தவரும், காப்பாற்றுகிறவரும், மோட்சம் கொடுக்கிறவரும், சகலவித நன்மை களுக்கும் ஊருணியுமாகிய என் தேவனை நான் சிநேகியாமல் பிறகு யாரை சிநேகிப்பேன்? ஜென்மப் பாவத்தால் அந்த சிநேகம் என்னிடம் அணைந்துபோனதால், மிகவும் மனம் நொந்து கலங்கி விசனப்படுகிறேன். படைக்கப்பட்ட நான் தாய் வயிற்றில் உற்பவமான நாள் முதல் இது வரையில் மதியீனத்தால் கட்டிக்கொண்ட சகல பாவத்தையும் பொறுத்து, என் நன்றிகெட்டதனத் தைச் சட்டை பண்ணாமல், உபகாரத்திற்கு மேல் உபகாரம் செய்து வருகிற ஆண்டவரது சிநேகத்தால் நான் இறந்துபோனாலல்லோ தாவிளை? திவ்ய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவை நேசிக்கா தவன் சபிக்கப்பட்டவன் என்று வேதத்தில் எழுதி யிருப்பதால் என்னை சகல ஆபத்துக்களிலு மிருந்து மீட்டு, தமது கோபாக்கினியின் இடி என் மேல் விழாமல் தடுத்த எனது பிரிய இரட்சகரை நான் நேசிக்காவிட்டால், நானே சபிக்கப்பட்டு அவரை விட்டு நித்திய காலம் பிரிவேன் என்றும் நினைத்து பயந்து நடுநடுங்குகிறேன். கண்களின் இச்சையாலும், மாமிசத்தின் இச்சையாலும், ஜீவியத்தின் பெருமையாலும், காணப்படும் பொருட் களின் மேல் நான் வைத்த ஆசையாலும், உலக வெகுமானத்தின் பேரில் கொண்ட விருப்பத் தாலும், என்னில் தேவசிநேகம் அற்றுப்போன தால், இவை எல்லாவற்றையும் விட்டு என்னையே நான் பகைத்து, என் தேவனை உருக்கமாக சிநேகிக் கும் வரத்தை நான் அடையச் செய்தருளும். உலக சிநேகத்தாலும், அழிந்து போகிற சரீரத்தின் பட்சத் தாலும், உன்னதமான மகிமையும், நித்திய பாக் கியமும், ஏக திரவியமும், அளவற்ற ஞானமும், இன்பக் கடலும், பரிபூரண சத்தியமும், நீதியும், ஞானமுமாயிருக்கிற என் தேவனை நான் இழப் பதை விட, அவரது சிநேகத்தால் என் இரத்த மெல்லாம் சிந்தி அவரது பாதத்தில் என் உயிரை விட்டாலல்லோ தாவிளை? தேவசிநேகம் நிறைந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவரே, சகல நன்மைகளுக்கும் உபகாரங்களுக்கும் ஊருணியான கர்த்தரை நான் என் சகல சத்துவங்களோடும், புத்தி சித்தம் அறிவோடும் எல்லாவற்றையும் பார்க்க, சிநேகிக்கச் செய்தருளும். தேவ கற்பனைகளின்படி நடப்பதே சிநேகமாகையால், உயிருக் கொட்டி அவைகளை அனுசரித்து தெய்வத் தோடு நான் ஐக்கியப்பட எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். பாவத்தால் கறைபட்டுக் குளிர்ந்த என் இருதயம், இஸ்பிரீத்துசாந்துவால் அனல் கொண்டு அக்கினி ஆகாயத்தில் தாவுவது போல் என் இருதயம் தேவனை நோக்கித் தாவ எனக்காக வரங் கேட்டருளும். தெய்வத்தைச் சிநேகிக்கிற சிநேகத்தில் நான் தேவனுக்குள் ஐக்கியமாகி, எல்லா மனிதரையும், அவருக் குள்ளும், அவருக்காகவும் சிநேகிக்க அனுக்கிரகித் தருளும். இரக்கமுள்ள தேவசிநேகத்தால் என் விரோதிகளுக்கு நான் பொறுத்தல் கொடுத்துத் தின்மைக்கு நன்மை செய்யும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும். 

ஆமென்.