அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் வார பக்தி.

DEDICATING THE WEEK (To.St.Anthony of Padua என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது)

திங்கள்

செபம்:
எனது மகிமையான பரிந்துரையாளரான துாய அந்தோனியாரே! அன்புடன் உமது பார்வையை என் மீது திருப்பிட வேண்டுகிறேன். பல புதுமைகளையும், தேவ அருளையும் செய்பவரே, என் பேரில் இரங்கி இந்த அவசர வேளையில் எனக்கு உதவி புரியும்.

தூயவரின் அறிவுரை
ஒருவனின் இரக்கச் செயல்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வர வேண்டும்.

நற்செயல்
பாவிகள் மனந்திரும்ப செபிப்பது

செவ்வாய் 

செபம்:
தேவசிநேகம் என்பது உம் அடியார்களிடம் காணப்பட்டது. அது இதுவரை என்னிடம் இல்லையே என வருந்துகிறேன். இதனால் உம்மை விட்டு அகன்று சென்று விட்டேன். உம் திருவருளாலும், அந்தோனியாரின் மன்றாட்டாலும் எனது வழிகளைத் திருத்தி எனது அயலாருக்கு மன்னிப்பளித்து அன்பு காட்டி உதவி செய்து அவர்கள் குற்றங்களைப் பொறுக்க வேண்டும்.

நற்செயல்
தேவையான அயலான் ஒருவனுக்கு ஆன்மீக அல்லது உலக சம்பந்தமான உதவி செய்தல்.

புதன்

செபம்:
செபத்தால் தேவ அருளையும், ஆன்மீக எதிரிகளுக்கு எதிரான ஆயுதங்களையும் அருளிய ஆண்டவரே, இதனை இம்மட்டும் - உணராமல் இருந்து விட்டேனே, புனித அந்தோனியாரின் முன் மாதிரிகையைப் பின்பற்றி இன்னும் அதிகமதிகம் செபித்திட அருள் புரியும்.

புனிதரின் அறிவுரை உன் செபத்தில் அதிக பற்றுதல், நம்பிக்கையும் வைத்திரு. உன் செபத்தை ஆண்டவர் உடனே ஆண்டவர் கேட்கவில்லையென அங்கலாய்ப்பு அடையாதே. ஏனெனில் உன் தகுதியை உயர்த்திட அவர் திருவுளம் கொண்டுள்ளார்.
நற்செயல்
அடிக்கடி செபித்தல்.

வியாழன் 

செபம்:
வாழ்வின் பல இன்னல்களில் உம்மிடம் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக மனிதரில் நம்பிக்கை வைத்தேன். என் மேல் கருணை புரியும். பாவியாகிய நான் தூய அந்தோனியாரின் வேண்டுதலால் உம்மீது என் முழு நம்பிக்கையை வைத்திட அருள் புரியும் என் தேவைகளில் எனக்கு உதவியாக வாரும்.

தூயவரின் அருள் வாக்கு
நம்பிக்கையும் தெரிவு பயமுமே ஞானத்தின் தொடக்கம். அதுவும் திவ்விய இயேசுவின் வழியில் அமைய வேண்டும்.

நற்செயல்
உன்னை முற்றிலும் இறைவன் கரங்களில் ஒப்புவித்து விடு.

வெள்ளி 

செபம் :
உலகின் மீதுள்ள பற்றுதலை அணைத்தருளும். தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அந்தோனியாரின் சுடரின் ஒரு சிறு ஒளியை எனக்குத் தாரும். உமது அருளால் இம்மையிலும் மறுமையிலும் நலம் பெறுவேனாக.

அண்ணலின் பொன்னுரை
தேவ சிநேகம், எல்லா புண்ணியங்களின் அடிப்படையாகும். தேவ சிநேகமின்றி செய்யப்படும் செபம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நமது நற்செயல்களும் நித்திய வாழ்விற்கெனப் பயன்பட மாட்டாது.

நற்செயல்.
அடிக்கடி தேவசிநேக முயற்சி செய்தல்.

சனி 

செபம்:
இதயத் தூய்மை என்பது பக்தி எனும் பலி எரியும் பீடமாகும். தன் கருணையுள்ள பார்வையை அதன் மீது இறைவன் செலுத்துகின்றார். "

நற்செயல்
தூய்மைக்கு எதிரான சமயங்களையும், இடங்களையும் விட்டு அகலுதல்.

ஞாயிறு 

செபம் :
இறைவா, தூய அந்தோனியாரிடம் விளங்கிய திடமான செயலுள்ள விசுவாசத்தை என் இதயத்தில் பதித்தருளும். விசுவாசங்குன்றிய எனக்கு தூய அந்தோனியார் மன்றாட்டினால் அதனை அருளி, உமது உண்மையான சீடனாக வாழ உதவுவீர்.

தூயவரின் சொல்
நற்கிரியைகள் செய்யாது விசுவாசிப்பது இறைவனின் முகத்தை நோக்கி நகைப்பதாகும்.

நற்செயல்
உலகப் பற்றை வெறுக்க முயற்சித்தல்.