அர்ச்சியசிஷ்ட சூசையப்பருக்கு செபம்: (வல்லமைமிகு செபம்.)

(இந்த மன்றாட்டு கி.பி.55-ம் ஆண்டு இயற்றப்பட்டது. கி.பி.1500-ம் ஆண்டில் பாப்பரசரால் மாமன்னன் சார்லஸ் போருக்குச் செல்லும் முன் கொடுக்கப்பட்டது.)

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.

உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும்.

மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும்.

ஆமென்.

இந்தச் செபத்தை வாசிக்கிறவர்கள், கேட்கிறவர்கள் அல்லது தங்களுடன் வைத்திருப்பவர்கள் அகால மரணத்தால் சாகமாட்டார்கள். தண்ணீரில் மூழ்கியும், விஷமுள்ள ஜந்துக்களாலும் சாகமாட்டார்கள். தீயினாலோ அல்லது அவர்களது எதிரிகளாலோ எந்தவித ஆபத்தும் அவர்களுக்கு நேரிடாது. யுத்தக்களத்தில் எப்பொழுதும் வெற்றியை அடைவார்கள்.